யாழ்ப்பாணம் கோப்பாய் பொாலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடு ஒன்று தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை திருநெல்வேலி பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரியவருகிறது.
வீடு தீப்பற்றி எரிந்தபோது அவர் உறக்கத்தில் இருந்திருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தீ பரவலுக்கான காரணம் விபத்தா? திட்டமிட்ட நடவடிக்கையா என்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருவதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்